Tuesday, July 21, 2009

எப்படி தான் சமாளிக்கிறாயோ....

பேசவேண்டியதை தவிர மற்றவையெல்லாம் பேசி விட்டு

தொலைபேசியை வைக்கும் போது

இருவரும் விடும் பெருமூச்சில் ஒளிந்திருக்கிறது காதல்...

*****************

நாம் ஒன்றாய் சுற்றும் போது எதிர்படும் என் நண்பர்களிடம்

உன்னை தோழியென்று அறிமுகப் படுத்த கஷ்டமாயிருக்கிறது

நீ எப்படி தான் சமாளிக்கிறாயோ....

*****************

யாருக்கும் தெரியாமல் எல்லாரும் காதலித்துக் கொண்டிருக்க

நான் உனக்கு தெரியாமல் உனையும்

நீ எனக்கு தெரியாமல் எனையும்

காதலித்துக் கொண்டிருக்கிறோம்.....

*****************

நமக்கிருவருக்கும் தனிமை வாய்க்கும் போது

எங்கே தோற்று விடுவோமோ

என பயந்து கொண்டு போட்டி போட்டுக் கொண்டு

பேசுகிறோம் அர்த்தமற்று...................

*****************

காதலை பறிமாறிக் கொள்வதற்கு முந்தைய

அந்த உணர்வை எவ்வளவோ

முயன்றும் வார்த்தைகளால் வடிக்க முடிவதில்லை தான்...

1 comment:

  1. நல்லா இருக்குங்க..

    i am now following you..


    அன்புடன்,

    அம்மு.

    ReplyDelete